search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயி அடித்து கொலை"

    தண்டராம்பட்டில் விவசாயியை அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள கீழ்ராவந்தவாடி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராமன் (வயது 55), விவசாயி. இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு விக்னேஷ் (20) என்ற மகனும், கவுசல்யா, லாவண்யா என்ற 2 மகள்களும் உள்ளனர். கவுசல்யாவுக்கு திருமணமாகி விட்டது. நேற்று முன்தினம் வழக்கம் போல் சுந்தர்ராமன் அருகில் உள்ள அவருக்கு சொந்தமான நிலத்திற்கு சென்றார்.

    நள்ளிரவாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த விஜயா நிலத்துக்கு சென்று பார்த்து உள்ளார். அப்போது சுந்தர்ராமன் கழுத்து, கால் உள்ளிட்ட இடங்களில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த விஜயா அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர் ஓடி வந்து பார்த்தனர். பின்னர் தண்டராம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதையடுத்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

    இறந்த சுந்தர்ராமனின் மகன் விக்னேஷ் டிப்ளமோ படித்து விட்டு வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்து உள்ளார். இவர் அடிக்கடி அவரது தந்தை சுந்தர்ராமனிடம் செலவுக்கு பணம் கேட்டு தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் விக்னேஷ் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த பெண்ணை திருமணம் செய்யக் கூடாது என சுந்தரராமன் மறுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    எனவே, விக்னேஷ் தான் தந்தையை கொலை செய்து இருக்க வேண்டும் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் தந்தையை எந்த காரணத்திற்காக கொலை செய்தார். எப்படி கொலை சம்பவம் நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பல்லடம் அருகே விவசாயியை அடித்து கொன்ற மகன் போலீசில் சரண் அடைந்தார்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மேற்கு ராசா கவுண்டம் பாளையத்தை சேர்ந்தவர் அருணாசலம் (65). விவசாயி.இவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.

    இதில் காய்கறிகள், கீரைகள் பயிரிட்டு விற்பனை செய்து வந்தார்.இவரது மகன் முருகேசன்.

    விசைத்தறி கூடம் நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் விசைத்தறி ஏஜெண்டாக வேலை பார்த்து வருகிறார்.முருகேசன் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தனது தந்தை வீட்டின் அருகில் தனித்குடித்தனம் நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு விவசாயி அருணாசலம் தனது வீட்டின் முன் உட்கார்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த முருகேசன் தனது தந்தையிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார்.

    இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முருகேசன் விசைத்தறிக்கு பயன்படுத்தும் மரக் கட்டையால் தனது தந்தை அருணாசலம் தலையில் ஓங்கி அடித்தார்.

    இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் அங்கு வந்த அருணாசலம் மனைவி கணவரை வீட்டிற்குள் அழைத்து சென்றார்.

    சிறிது நேரத்தில் அருணாசலம் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

    அவரை பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அருண £சலத்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தந்தை இறந்த தகவல் கிடைத்ததும் முருகேசன் அதிர்ச்சி அடைந்தார். அவர் பல்லடம் போலீசில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×